மாற்றத்துக்கு மஹிந்த இணங்கியது ஏன்?

அதி­கா­லையில், தான் மேற்­கொண்ட அதி­கா­ரத்தை தக்­க­வைக்கும் முயற்சி தோல்வி கண்டதால், தொடர்ந்தும் அலரிமாளிகையில் இருப்­பது பாதுகாப்­பற்­றது என்று கருதியே அவர் முன்­கூட்டியே வெளியேற முடிவு செய்­தி­ருக்­கலாம்.
சர்­வ­தேச அழுத்­தங்கள், நெருக்­க­டி­களில் இருந்து தப்பிக் கொள்­வ­தற்­காக அவ்­வாறு செய்­தி­ருக்­கலாம் அல்லது பொது­மக்­க­ளிடம் நற்பெயரைத் தேடிக் கொள்­வ­தற்­காகவும் அவ்­வாறு செய்திருக்­கலாம்
ஜனா­தி­பதி தேர்­த­லுக்குப் பின்னர், சுமு­க­மான முறையில் அதி­காரக் கைய­ளிப்பு இடம்­பெற்­றது குறித்து பல்­வேறு நாடு­களின் தலை­வர்­களும், ஐ.நா பொதுச்­செ­யலர் பான் கீ மூன் உள்­ளிட்­டோரும், வர­வேற்புத் தெரி­வித்­தாலும், இன்­னொரு பக்­கத்தில், அதி­கா­ரத்தை தக்­க­வைக்க முயன்­ற­தான குற்­றச்­சாட்டு மஹிந்த ராஜ­பக்சவின் மீது சுமத்­தப்­பட்­டுள்­ளது.
ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவோ, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவோ இது­பற்றி எதுவும் கூறா­வி­டினும், வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர, சுகா­தார அமைச்சர் ராஜித சேனா­ரத்ன, பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அத்­து­ர­லியே ரதன தேரர் உள்­ளிட்டோர் இந்தக் குற்­றச்­சாட்டை தீவி­ர­மாக முன்­னெ­டுத்து வரு­கின்­றனர்.
இரா­ணு­வத்தைப் பயன்­ப­டுத்தி, அதி­கா­ரத்தை தக்­க­வைப்­ப­தற்கு மஹிந்த ராஜ­பக்ச முயற்­சித்­தாரா? என்­பது பற்றி தற்­போது ஆரம்­பிக்­கப்­பட்­டுள்ள விசா­ர­ணை­களின் முடிவில் தான் தெளி­வாகத் தெரி­ய­வரும்.
ஆனால், இந்தக் குற்­றச்­சாட்டை முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்சவும், வெளி­வி­வ­கார அமைச்சர் ஜி.எல்.பீரிஸும், மறுத்­தி­ருக்­கி­றார்கள்.
அதி­கா­ரத்தை சுமு­க­மாகக் கைய­ளித்­த­மைக்கு, அமெ­ரிக்க இரா­ஜாங்கச் செயலர் ஜோன் கெரியே பாராட்டுத் தெரி­வித்­தி­ருக்கும் போது, இந்தக் குற்­றச்­சாட்டு சுமத்­தப்­ப­டு­வது அபாண்டம் என்­கிறார் பீரிஸ்.
45 ஆண்டுகால அர­சி­யலில் எத்­த­னையோ வெற்­றி­க­ளையும் தோல்­வி­க­ளையும் சந்­தித்துப் பழகிப்போன தனக்கு இது ஒன்றும் பெரிய விட­யமே அல்ல என்று கூறி­யி­ருக்­கிறார் மஹிந்த ராஜ­பக்ச.
எவ்­வா­றா­யினும், மஹிந்த ராஜ­பக்ச, இவ்­வ­ளவு இல­கு­வாக அலரி மாளி­கையை விட்டு, தனது பத­வியை விட்டு விலக முன்­வந்த ஆச்­ச­ரி­யத்தில் இருந்து இன்­னமும் பலரால் வெளி­வர முடி­ய­வில்லை என்­பதை மறுக்க முடி­யாது.
இலங்­கையின் அதி­காரக் கட்­ட­மைப்பில் அந்­த­ள­வுக்கு தனது குடும்­பத்­தி­ன­ரையும், விசு­வா­சி­க­ளையும் அமர வைத்து, ஒரு மன்­னரைப் போல ஆட்சி நடத்­தி­யவர் தான் மஹிந்த ராஜ­பக்ச.
அதனால் தான், முன்னாள் ஐ.நா மனித உரிமை ஆணை­யாளர் நவ­நீ­தம்­பிள்ளை உள்­ளிட்­டோரால், எதேச்­சா­தி­கா­ரத்தை நோக்கி இலங்கை செல்­வ­தான குற்­றச்­சாட்டு எழுப்­பப்­பட்­டது.
முன்னர் எதிர்க்­கட்­சியில் இருந்­த­வர்­களே கூட சர்­வா­தி­கார ஆட்சி என்றே மஹிந்த ராஜ­பக்சவின் ஆட்­சியை விமர்­சித்­ததை மறக்க முடி­யாது.
இடி அமீன் என்று இப்­போ­தைய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வினால் விமர்­சிக்­கப்­பட்­ட­தையும் மறந்து விட­மு­டி­யாது.
அவ்­வாறு பலம் வாய்ந்­த­வ­ராக அதி­கா­ரத்தைச் செலுத்­திய ஒருவர் தேர்­தலில் தோல்வி கண்­ட­தையே அவ்­வ­ளவு இல­கு­வாக நம்­ப­மு­டி­யாத நிலையில், அவர் பத­வியை விட்டு அமை­தி­யாக விலகிப் போனதை எவ்­வாறு தான் நம்ப முடியும்?
மஹிந்த ராஜ­பக்ச தோல்­வி­யுற்றால் கூட, அவர் பத­வியை விட்டு அமை­தி­யாக விலகிச் செல்­வாரா என்ற சந்­தேகம், தேர்­த­லுக்குச் சில நாட்கள் முன்­ன­தா­கவே எழுந்­தி­ருந்­தது.
பி.பி.சி.யின் செய்­தி­யாளர் சார்ள்ஸ் ஹவிலன்ட் உள்­ளிட்ட சர்­வ­தேச ஊட­க­வி­ய­லா­ளர்கள் பலரும் இதனைத் தமது ஆய்­வு­களில் குறிப்­பிட்­டி­ருந்­தனர்.
அந்த சந்­தேகம் ஏற்­பட்­ட­தற்குக் காரணம், மஹிந்த ராஜ­பக்ச தனது குடும்ப அதி­கா­ரத்தை அந்­த­ள­வுக்கு எல்லாத் துறை­க­ளுக்­குள்­ளேயும், விரி­வாக்கிக் கொண்­டி­ருந்தார்.
ஆழ ஊடு­ருவி அசைக்க முடி­யாத ஒரு­வ­ராக மாறி­யி­ருந்த அவ­ரது ஆட்­சியை, 2022 வரை எவரும் அசைக்க முடி­யாது என்று முன்னாள் அமைச்சர் கெஹ­லிய ரம்­புக்­வெல போன்றோர் அவ்­வப்­போது அச்­சு­றுத்தி வந்­தனர்.
ஆனால், எல்­லாமே கடந்த 9ம் திகதி அதி­கா­லை­யுடன் மாறிப் போனது. மஹிந்த ராஜ­பக்ச ஒரு உறு­தி­யான ஆல­ம­ர­மாக,  கிளை­ப­ரப்பி விசா­லித்து நிற்­ப­தா­கவே கரு­தப்­பட்­டாலும், அவ­ரது காலுக்குக் கீழ் கறை­யான்கள் புற்­றெ­டுத்­ததை அறி­யா­தி­ருந்து விட்டார்.
அதனால் அது உளுத்துப் போன மர­மாகிப் போனது. தேர்தல் என்ற சிறி­ய­தொரு காற்­றுக்கே அதனால் தாக்குப் பிடிக்க முடி­யாமல் போனது.
மஹிந்த ராஜ­பக்ச எதற்­காக தேர்தல் முடி­வுகள் வெளி­வ­ரு­வ­தற்கு முன்­ன­தா­கவே, அலரி மாளி­கையில் இருந்து வெளி­யேற முடிவு செய்தார் என்ற கேள்வி இன்­னமும் நீடித்து வரு­கி­றது.
அதி­கா­லையில், தான் மேற்­கொண்ட அதி­கா­ரத்தை தக்­க­வைக்கும் முயற்சி தோல்வி கண்­டதால், தொடர்ந்தும் அலரி மாளி­கையில் இருப்­பது பாது­காப்­பற்­றது என்று கரு­தியே அவர் முன்­கூட்­டியே வெளி­யேற முடிவு செய்­தி­ருக்­கலாம்.
சர்­வ­தேச அழுத்­தங்கள், நெருக்­க­டி­களில் இருந்து தப்பிக் கொள்­வ­தற்­காக அவ்­வாறு செய்­தி­ருக்­கலாம். அல்லது பொது­மக்­க­ளிடம் நற்­பெ­யரைத் தேடிக் கொள்­வ­தற்­காகவும் அவ்­வாறு செய்­தி­ருக்­கலாம். எனினும், தோல்­வி­ய­டை­வதை உணர்ந்து வெளி­யேற முடிவு செய்து விட்டேன் என்றே கூறு­கிறார் மஹிந்த ராஜ­பக்ச.
ஆனால், கடந்த 10ம் திகதி சுதந்­திரக் கட்சித் தலை­மை­ய­கத்­துக்கு வெளியே கூடி­யி­ருந்­த­வர்கள் மத்­தியில் உரை­யாற்­றிய போது, தேர்­த­லுக்கு முதல் நாள் தன்­னுடன் தொலை­பே­சியில் தொடர்பு கொண்டு பேசிய அமெ­ரிக்க இரா­ஜாங்கச் செயலர் ஜோன் கெரி எது நடந்­தாலும் அமை­தி­யான முறையில் இடம்­பெற வேண்டும் என்றும் தேர்தல் அமை­தி­யாக நடத்­தப்­பட வேண்டும் என்றும் கூறி­ய­தாக தெரி­வித்­தி­ருந்தார்.
அமெ­ரிக்க இரா­ஜாங்கச் செயலர் கூறி­ய­ப­டியே தேர்­த­லையும் அமை­தி­யாக நடத்தி விட்­ட­தா­கவும், அதி­கா­ரத்தில் இருந்தும் அமை­தி­யாக வெளி­யேறி விட்­ட­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.
அமெ­ரிக்­காவும், ஐ.நா. பொதுச்­செ­ய­லரும், நியூ­சி­லாந்து உள்­ளிட்ட பல நாடு­களும், அதி­காரம் அமை­தி­யாக கைமாற்­றப்­பட்­ட­தற்கு மஹிந்த ராஜ­பக்சவுக்கு வாழ்த்துக் கூறி­யி­ருந்­தன.
மஹிந்த ராஜ­பக்சவின் பெருந்­தன்­மையை பாராட்­டு­வதே இதன் அர்த்தம், என்று கரு­தினால் அது தவறு. அத்­த­கை­ய­தொரு அமை­தி­யான அதி­கார மாற்­றத்­துக்கு அச்­சு­றுத்­த­லான சூழல் ஒன்று இருந்­தது என்­ப­தையே அது வெளிப்­ப­டுத்­தி­யது.
அதனால் தான், அப்­பாடா. அமை­தி­யாக அதி­காரம் கைமாறி விட்­டது என்று வாழ்த்துக் கூறப்­பட்­டது. இவ்­வாறு நடந்து கொள்­வது சர்­வ­தேச அரங்கில் தனது மதிப்பை உயர்த்தும் என்று மஹிந்த ராஜ­பக்ச எதிர்­பார்த்­தி­ருக்­கலாம்.
அதை­விட அவ­ருக்கு அமெ­ரிக்க இரா­ஜாங்கச் செயலர் ஜோன் கெரி விடுத்­தி­ருந்த எச்­ச­ரிக்­கையும் நினைவில் இருந்­தி­ருக்கக் கூடும்.
இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி­யிடம் இருந்து அத்­த­கைய எந்த தொலை­பேசி எச்­ச­ரிக்­கையும் வந்­தி­ருக்­க­வில்லை என்­பதை முன்னாள் வெளி­வி­வ­கார அமைச்சர் பீரிஸ் உறு­திப்­ப­டுத்­தி­யி­ருக்­கிறார்.
ஆனால் அமெ­ரிக்­காவின் எச்­ச­ரிக்­கையை மஹிந்த ராஜ­பக்சவினால் அவ்­வ­ளவு இல­கு­வாக உதா­சீனம் செய்ய முடி­யாது.
அதை­விட, ஏதா­வது அதி­காரக் கைய­ளிப்பில் குழ­று­ப­டி­களைச் செய்தால், அது மிக அமை­தி­யாக இருக்க வேண்டும். வன்­மு­றைகள் வெடிக்கும் நிலை உரு­வானால் அது பாப்­ப­ர­சரின் பய­ணத்தைப் பாதிக்கும்.
அது சர்­வ­தேச அரங்கில் தன்னை ஒரு மிக மோச­மான ஆட்­சி­யா­ள­ராக அறி­மு­கப்­ப­டுத்தும் என்­ப­தையும் மஹிந்த ராஜ­பக்ச கவ­னத்தில் கொண்­டி­ருந்தார்.
சீனா உள்­ளிட்ட தன்னைப் பாது­காக்கும் நாடுகள் கூட அத்­த­கை­ய­தொரு இக்­கட்­டான நிலையில் உதவ முன்­வ­ராது என்­பதை மஹிந்த ராஜ­பக்ச நன்கே அறிந்­தி­ருந்தார்.
அவ்­வாறு சர்­வ­தேச அரங்கில் ஓரம்­கட்­டப்­பட்ட ஒரு­வ­ராக வலம் வரு­வது எத்­த­கைய ஆபத்­தான விடயம் என்­பதை, கடா­பியும், சதாம் ஹுசேனும் எதிர்­கொண்ட நிலை அவ­ருக்கு நிச்­சயம் உணர்த்­தி­யி­ருக்கும்.
அது தான் முப்­ப­டை­களின் வல்­லமை மிக்க தள­ப­தி­யாக இருந்­தாலும், பாது­காப்புக் கட்­ட­மைப்பில், பல­மான ஆதிக்­கத்தைக் கொண்­டி­ருந்­தாலும், அவரால் அதி­கா­ரத்தை தக்­க­வைப்­ப­தற்கு நீண்ட முயற்­சி­களை முன்­னெ­டுக்க முடி­யாமல் தடுத்­தி­ருக்கும்.
இது தான் அதி­காரக் கைமாற்றம் சுமு­க­மாக இடம்­பெறக் காரணம்.
ஒரு­வேளை பலாத்­கா­ர­மாக அதி­காரத்தைத் தக்கவைக்க அவர் முயன்றிருந்தால் நிச்­ச­ய­மாக அதற்­கெ­தி­ராக இந்­தியா போர்க்­கொடி உயர்த்­தி­யி­ருக்கும்.
அதை­விட கொமன்வெல்த் தலை­மையில் இருந்தும் மஹிந்த ராஜ­பக்ச தூக்கி வீசப்­பட்­டி­ருப்பார்.
கொமன்வெல்த் கண்­கா­ணிப்புக் குழுவின் தலைவர் தனது இடைக்­கால அறிக்கையில் தேர்தல் முற்­றிலும் ஜன­நா­ய­கமான சூழலில் நடக்­க­வில்லை என்று குறிப்­பிட்­டது இங்கு நினைவில் கொள்­ளத்­தக்­கது.
இவ்­வா­றாக இரா­ணுவ உத­வி­யுடன் ஆட்­சியைத் தக்­க­வைப்­ப­தற்கு முயன்­றாலும், அதற்கு அவர் தீவி­ர­மாக முயற்­சி­களை முன்­னெ­டுக்­காது போயி­ருக்­கலாம் என்­ப­தற்கு ஒரு காரணம், அவர் உலகின் முன்­பாக தான் தனித்து விடப்­பட்ட ஒரு­வ­ராக மாற விரும்­பா­த­தே­யாகும்.
அது தன்­னையும் தனது ஒட்­டு­மொத்த குடும்­பத்­தையும் எங்கே கொண்டு போய் நிறுத்தும் என்­பதை மஹிந்த உணர்ந்துணர்ந்து கொண்டிருந்ததால் தான் அதிகாரக் கைமாற்றம் சுமுகமாக நடந்தேறியது.
Thx By - Tamil Win And Wikipedia 
Previous Post Next Post
Breaking News
Loading...